சிதம்பரப்பிள்ளை விநாயகசிவம்பிள்ளை (சிவம்) இடைப்பிட்டி, காரைநகர்.
மரண அறிவித்தல்

சிதம்பரப்பிள்ளை விநாயகசிவம்பிள்ளை (சிவம்)
இடைப்பிட்டி, காரைநகர்.
காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை விநாயகசிவம்பிள்ளை (சிவம்) 16.02.2012 அன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளையின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தியாகராஜா வள்ளியம்மையின் அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் சச்சிதானந்தம், வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சண்முகராஜா(லண்டன்), சிவகௌரி, தெய்வநாயகி ஆகியோரின் தந்தையாரும் ஜெயராஜாவின்(கனடா) மாமனாரும், தேவராஜா, பரமசிவம், பராசக்தி ஆகியோரின் மைத்துனரும் கருணாநிதி, தயாநிதி ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.02.2012 அன்று காலை 10.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இடைப்பிட்டி, தகவல்
காரைநகர். மனைவி, பிள்ளைகள்





